peris
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது! – அச்சுறுத்தல்களுக்கு பணியமாட்டோம் என்கிறார் பீரிஸ்

Share

“பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அது தொடர்பில் நாம் பல விடயங்களை செய்துவருகின்றோம்.

எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது, அதை முழுமையாக இரத்து செய்யமாட்டோம். திருத்தி அமைக்கப்படும்.

அதற்கான யோசனைகள் சபையில் முன்வைக்கப்படும். அச்சுறுத்தல்களுக்கு பணிந்து நாம் தீர்மானம் எடுப்பதில்லை.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். அதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணி வருகின்றோம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...