SHUTTERSTOCK GUNSHOT GUN FIRING
செய்திகள்இந்தியா

மணிப்பூரில் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற பயங்கரம்!

Share

இந்தியா மணிப்பூரில், இறுதிச்சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் செயற்பட்டுவரும் குகி என்னும் பயங்கரவாத அமைப்பு, பொதுமக்கள் மற்றும் படையினர் மீது இடையிடையே தாக்குதல்களை நடாத்தி வருகிறது.

இந்நிலையில் குகி அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, மணிப்பூரிலுள்ள ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த 10ஆம் திகதி படையினர் தாக்குதல் நடாத்திய தாக்குதலில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு, அம்மாநிலத்தின் கங்மம் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது அக்கிராம மக்கள் பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், அங்கு வந்த குகி பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கங்மம் கிராம மக்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்துத் தப்பியோடிய பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...