லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் - மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!
செய்திகள்உலகம்

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

Share

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கோடை காலம் ஆரம்பிக்கத் தொடங்கும் நிலையில், இந்த வாரம் முழுவதும் லண்டனில்
சூடான மற்றும் வறண்ட காலநிலையை உணர முடியும். இங்கிலாந்தின் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக லண்டன் இருக்கும் என்று வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகள் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக 26 செல்ஸியஸ் வெப்பநிலையில் காணப்படும்.

வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரிகளின் அறிக்கையின்படி, லண்டன் உட்பட இங்கிலாந்தின் பல பகுதிகள் வழக்கத்தை விட, இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாரம் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வாகக் காணப்படினும், வட கடலில் இருந்து வீசக்கூடிய காற்று காரணமாக, சில பிராந்தியங்கள் வாரத்தின் இறுதிப் பகுதியில் குளிர்ச்சியாக காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.

குறிப்பாக புதன்கிழமை (இன்று முதல் ), இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பகுதிகளில் வெப்பநிலையானது 24 செல்ஸியஸ் உச்சத்தை எட்டக்கூடும், அதே நேரத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் மேற்கு பகுதிகள் 26 செல்ஸியஸ் வரை இருக்கும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது, வடக்கு பகுதியிலிருந்து வீசம் காற்றால், குறைவடைந்து செல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த வார இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடி தாக்கியபோது மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இது நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இதேவேளை, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள் வழக்கத்தை விட வறட்சியடைந்து காணப்படுகின்றன. தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் அண்மையில் அடைமழை பெய்தது. இதனால், நாடு இந்த மாதத்துக்கான அதன் சராசரி மழைப்பொழிவில் 72% ஐக் கண்டுள்ளது.

இருப்பினும், இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் கிடைக்கவுள்ள மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க சாத்தியம் உள்ளது என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...