tata
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கியது டாட்டா !!

Share

ஏர் இந்தியா நிறுவனத்தை,டாட்டா குழுமம் அதிகாரபூர்வமாக வாங்கிக்கொண்டுள்ளது.

இந்திய ரூபாயில் 18 ஆயிரம் கோடிக்கு டாட்டா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்த நிலையில்,

அந்நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் அதனை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அண்மித்த ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், கடன் நெருக்கடியால் அந்நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய யாரும் முன்வராத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசாங்கத்தினால், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் தொடர்பான ஏல விவரங்களை சமர்ப்பிக்கஅறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய டாட்டா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏலவிபரங்களை சமர்ப்பித்தது.

டாட்டா நிறுவனத்தின் விபரங்களை ஏற்றுக்கொண்ட இந்திய மத்திய அரசு, பதினெட்டு ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை, டாட்டா நிறுவனம் வாங்கியுள்ளதாக, இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...