gajendrakumar 768x461 1
செய்திகள்இலங்கை

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

Share

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை தன் முன்பு மண்டியிடச்செய்துள்ளார். அதேநேரம் துப்பாக்கியை காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

கைதிகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே, அவர்களைக் கொல்வேன் என அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பார்வை இலங்கையில் இருக்கும் நிலையில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த சம்பவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாதால் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக மாறும். இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துகிறேன் – என்றார்.

Lohan Ratwatte

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...