gajendrakumar 768x461 1
செய்திகள்இலங்கை

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

Share

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை தன் முன்பு மண்டியிடச்செய்துள்ளார். அதேநேரம் துப்பாக்கியை காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

கைதிகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே, அவர்களைக் கொல்வேன் என அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பார்வை இலங்கையில் இருக்கும் நிலையில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த சம்பவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாதால் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக மாறும். இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துகிறேன் – என்றார்.

Lohan Ratwatte

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...