Tablighi
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளின் பட்டியலில் தப்லீக் ஜமாத் அமைப்பு!

Share

சவுதி அரேபிய அரசு,  தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது.

ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தப்லீக் ஜமாத் அமைப்பு தொடர்ந்து சவுதி அரேபிய அரசு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்பை சவுதி அரேபிய அரசு தடை செய்ததோடு, அவ்வமைப்பு தீவிரவாதிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவு வெளியிட்ட சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம்,

ஒவ்வெரு வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடைபெறும் போது, தப்லீக் ஜமாஅத் பற்றி மக்களை எச்சரிக்கும் வகையிலான பிரசங்கங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்த இஸ்லாமிய விவகார அமைச்சகம்,

‘இந்த அமைப்பின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி பிரகடனம் செய்ய வேண்டும்.

மேலும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைக் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் .

தப்லீக் மற்றும் தாவா குழு உட்பட பாகுபாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வமைப்பில் யாரும் இணைந்தாலோ அதை யாரும் ஆதரித்தலோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுமென சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...