147a6d45 9627 4bde 9ae3 94d9028e8041
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலை அருகில் வாள்வெட்டு! – இளைஞன் மருத்துவமனையில்

Share

இளைஞன் ஒருவன் கும்பல் ஒன்றால் துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில்
இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற்றுள்ளது.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் யாழ். நகர் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், குறித்த நபரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் பரமேஸ்வரா சந்தியில் வழி மறித்து மிகக் கடுமையான வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பித்து, இளைஞன் பல்கலைகழக பக்கமாக தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...