IMG 20211202 WA0041 960x540 1
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது

Share

இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்றை சேர்ந்தவர்கள் என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெருகல் மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் புதையல் தோண்டிய போது வெருகல் பகுதி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட இடத்திலிருந்து 2 மண்வெட்டிகள், இரண்டு சவல், அலவாங்கு, கேன் போத்தல், தாச்சி, பிக்காசு, பானை மற்றும் இரண்டு சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...