palani
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டத்துக்கே ஆதரவு! – பழனி திகாம்பரம்

Share

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஏற்கின்றோம். அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதற்கு அப்பால் சென்று, சுயநிர்ணய உரிமை கோரப்பட்டால் அதற்கு வழங்க முடியாது. கையொப்பம் இடவும் மாட்டேன். ஏனெனில் அவ்வாறு செய்தால் அது நாமும் தனி நாடு கோருகின்றோம் என்ற எதிர்ப்பை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும். அது எமது மக்களுக்கும் பாதிப்பாக அமையும். எமது மக்களுக்கு உரிமை, அபிவிருத்தி என இரண்டுமே அவசியம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...