5
செய்திகள்இந்தியாஇலங்கைபிராந்தியம்

சுப்பர்மடம் – மீனவர்கள் போராட்டத்துக்கு தடை விதித்தது நீதிமன்று!

Share

தொடர்ந்து நான்கு நாட்களாக பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், பருத்தித்துறை பொலிஸார் மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இன்றைய தினம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பொலிஸாரால் தடைகோரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றால் மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...