WhatsApp Image 2021 11 01 at 9.00.19 PM
செய்திகள்அரசியல்இலங்கை

சுமந்திரன் சுட்ட தோசை – உண்டு மகிழ்ந்த மீனவர்கள்!!!!!

Share

இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

றோலர் தொழிலிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகள் N.V. சுப்பிரமணியம் – தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், J. பிரான்சிஸ் – உப தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், A.மரியராசா-பொருளாளர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், அன்ரனி யேசுதாஸன் – தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர்,V.அருள்நாதன் -தலைவர் முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டில் தோசை சுட்டு வழங்கிய படங்கள் மற்றும் காணொலி தற்போது வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2021 11 01 at 9.00.20 PM WhatsApp Image 2021 11 01 at 9.00.21 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...