libyaexplosionreutersx 1519222499
செய்திகள்உலகம்

தற்கொலை குண்டுத் தாக்குதல் – சோமாலியாவில் ஏழு பேர் உயிரிழப்பு!

Share

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்ததாக மாவட்ட பொலிஸ் தலைவர் முகாவியே அஹமது முதே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அல் ஷபாப் இஸ்லாமியவாத போராட்டக் குழுவே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதில் ஏழு கார்கள் மற்றும் மூன்று ரிக்சோ வண்டிகள் சேதமடைந்திருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...