libyaexplosionreutersx 1519222499
செய்திகள்உலகம்

தற்கொலை குண்டுத் தாக்குதல் – சோமாலியாவில் ஏழு பேர் உயிரிழப்பு!

Share

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்ததாக மாவட்ட பொலிஸ் தலைவர் முகாவியே அஹமது முதே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அல் ஷபாப் இஸ்லாமியவாத போராட்டக் குழுவே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதில் ஏழு கார்கள் மற்றும் மூன்று ரிக்சோ வண்டிகள் சேதமடைந்திருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...