sugar 1
செய்திகள்இலங்கை

கையிருப்பில் மூன்று வாரங்களுக்கே சீனி!!– இறக்குமதியாளர் சங்கம்

Share

சீனி விலையைக் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ள இறக்குமதியாளர்கள் சங்கம், சுமார் 3 வாரங்களுக்குப் போதுமான சீனியே கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு வகையில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காது விட்டால் நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு வாரத்துக்குள் ஒரு கிலோ சீனியின் விலை 100 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதையடுத்து சீனியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

சிற்றுண்டிசாலைகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவாக அதிகரிக்க நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...