army 720x375 1
செய்திகள்இலங்கை

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

Share

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் அந்த
இடங்களில் பதுங்கியிருகின்றனர் என யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை பொலிஸார் மற்றும் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கொக்குவிலின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...