ramesh pathirana 800x425 1
செய்திகள்அரசியல்இலங்கை

இரசாயன உரங்களுக்கு மானியம்!

Share

இரசாயன உரங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்  மானியம் வழங்குவதற்கு அல்லது விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

காலி, நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது உலக சந்தையில் உரங்கள் மட்டுமின்றி எரிபொருள், பால்மா, சீமெந்து, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் உற்பத்திப் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் எமது நாட்டிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. உலகில் எந்த அரசும் தனது ஆட்சியில் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களை வரிசையில் நிற்க வைக்க விரும்புவதில்லை.

இந்த ஆண்டு பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இரசாயன உரங்கள் மீதான தடை நல்ல நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தேயிலை தொழிற்துறை உட்பட ஏனைய துறைகளுக்கு அதை தாங்க முடியவில்லை. ஆனால் தற்போது இரசாயன உரங்கள் பெறப்படுகின்றன.

ஆனால் 50 கிலோ உர மூட்டை ரூ.7,200 வாக காணப்படுகின்றது. அதை மக்களால் வாங்க முடியாது. எனவே  உடனடியாக நிவாரணம் வழங்க முடியாவிட்டாலும், முறையாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் உரத்திற்கான மானியத்தினை வழங்குவோம்.  அதுமட்டுமின்றி உர விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேயிலை தொழிற்துறை 2020 ஆம் ஆண்டளவில் 279 மில்லியன் கிலோகிராம் வளர்ச்சியைக் காட்டியது.  ஆனால் உர நெருக்கடி இருந்த போதிலும் கடந்த வருடம் 305 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி கிடைத்துள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.  தேயிலை பயிரிட விரும்பும் எவருக்கும் வசதிகள் செய்து தரப்படும்.

தேயிலை செடிகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அதிக நிழல் தரும் செடிகள், குட்டை நிழல் செடிகள், டொலமைட் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...