ramesh pathirana 800x425 1
செய்திகள்அரசியல்இலங்கை

இரசாயன உரங்களுக்கு மானியம்!

Share

இரசாயன உரங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்  மானியம் வழங்குவதற்கு அல்லது விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

காலி, நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது உலக சந்தையில் உரங்கள் மட்டுமின்றி எரிபொருள், பால்மா, சீமெந்து, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் உற்பத்திப் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் எமது நாட்டிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. உலகில் எந்த அரசும் தனது ஆட்சியில் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களை வரிசையில் நிற்க வைக்க விரும்புவதில்லை.

இந்த ஆண்டு பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இரசாயன உரங்கள் மீதான தடை நல்ல நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தேயிலை தொழிற்துறை உட்பட ஏனைய துறைகளுக்கு அதை தாங்க முடியவில்லை. ஆனால் தற்போது இரசாயன உரங்கள் பெறப்படுகின்றன.

ஆனால் 50 கிலோ உர மூட்டை ரூ.7,200 வாக காணப்படுகின்றது. அதை மக்களால் வாங்க முடியாது. எனவே  உடனடியாக நிவாரணம் வழங்க முடியாவிட்டாலும், முறையாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் உரத்திற்கான மானியத்தினை வழங்குவோம்.  அதுமட்டுமின்றி உர விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேயிலை தொழிற்துறை 2020 ஆம் ஆண்டளவில் 279 மில்லியன் கிலோகிராம் வளர்ச்சியைக் காட்டியது.  ஆனால் உர நெருக்கடி இருந்த போதிலும் கடந்த வருடம் 305 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி கிடைத்துள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.  தேயிலை பயிரிட விரும்பும் எவருக்கும் வசதிகள் செய்து தரப்படும்.

தேயிலை செடிகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அதிக நிழல் தரும் செடிகள், குட்டை நிழல் செடிகள், டொலமைட் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....