Protest 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசுக்கெதிராக முழங்கியது புதுக்குடியிருப்பில் போராட்டம்!!

Share

நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும், மாட்டு வண்டிலில் அதிகரித்த விலைக்குரிய பொருட்கள் சிலவற்றை ஏற்றியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Protest 04

நாட்டில் அதிகரித்துள்ள சமையல் எரிவாயு விலை, சீனி விலை, சீமெந்து விலை உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு எதிராகவும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஏற்றாதே எற்றாதே பொருட்களின் விலையை ஏற்றாதே, அடிக்காதே அடிக்காதே ஏழை வயிற்றில் அடிக்காதே, அடிக்காதே அடிக்காதே காசுகளை அடிக்காதே, விற்காதே விற்காதே நாட்டை விற்காதே” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வரை பேரணியாகச் சென்றனர்.

Protest

பேரணியாகச் சென்றவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம் இந்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...