வலுக்கும் மீனவர் போராட்டம்! – திண்டாடும் டக்லஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் வீதி மறியல் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வருகைதந்த நிலையில் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு வருகைதந்த அமைச்சரிடம் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,

எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்தே அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.

பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

IMG 20220203 WA0040  

#SriLankaNews

Exit mobile version