muruththettuwe ananda thero 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்! – பஸிலுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை

Share

” நீங்கள் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே, நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, ஆறு மாதங்களுக்காவது அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்.”

இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, ஆலோசனை வழங்கியுள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பலரும் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். குறிப்பாக நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னரே நிலைமை மோசமடைந்துவிட்டது என மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

இது சாபமோ என்னவோ தெரியவில்லை, மக்கள் கருதுவது உண்மையெனில், அரசியலில் இருந்து ஆறு மாதங்களாவது நிதி அமைச்சர் ஒதுங்கி இருக்க வேண்டும்.

நாடு மோசமான கட்டத்தில் உள்ளது. அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...