muruththettuwe ananda thero 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்! – பஸிலுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை

Share

” நீங்கள் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே, நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, ஆறு மாதங்களுக்காவது அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்.”

இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, ஆலோசனை வழங்கியுள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பலரும் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். குறிப்பாக நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னரே நிலைமை மோசமடைந்துவிட்டது என மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

இது சாபமோ என்னவோ தெரியவில்லை, மக்கள் கருதுவது உண்மையெனில், அரசியலில் இருந்து ஆறு மாதங்களாவது நிதி அமைச்சர் ஒதுங்கி இருக்க வேண்டும்.

நாடு மோசமான கட்டத்தில் உள்ளது. அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
police special task force stf sri lanka
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க அருட்தந்தை மீது கொடூரத் தாக்குதல்: 8 காவல்துறை அதிகாரிகள் அதிரடி கைது மற்றும் பணி இடைநீக்கம்!

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

1727675975 2112027 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மாறும் அரசியல் களம்: ரணில் – சஜித் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணிகள் மற்றும் மீள்-இணைவுகள் குறித்த அதிரடி நகர்வுகள்...

23482512 vijay0
செய்திகள்இந்தியா

யாருடைய அழுத்தத்திற்கும் பணியமாட்டேன்: மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேச உரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று...

1769314931 IMG 20260125 WA0005
செய்திகள்இலங்கை

புதிய சட்ட வரைபும் ஒரு அடக்குமுறை கருவியே: பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும்...