1769314931 IMG 20260125 WA0005
செய்திகள்இலங்கை

புதிய சட்ட வரைபும் ஒரு அடக்குமுறை கருவியே: பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

Share

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைபு” (PSTA), அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய வரைபானது பாதுகாப்புத் துறையினருக்குத் தொடர்ந்தும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இது ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை முடக்கும் ஒரு உத்தியாக அமையும்.

1979-இல் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்ட PTA இன்னும் நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதம் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் இன்றி பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு விருப்பமான அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

வடகிழக்கில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கொடூரம், கொழும்பு ‘அரகலய’ போராட்டத்தின் போது தெற்கு மக்களால் உணரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளுக்குக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், அந்த இடைவெளியில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு மனிதனின் நடமாடும் சுதந்திரத்தைப் பொலிஸாரே தீர்மானிக்கும் நிலை உருவாகும். புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே தவிர, ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் அற்றதாக நீதித்துறை மாற்றப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், ஒரு வருடம் கடந்த நிலையிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, பெயரளவில் சில மாற்றங்களைச் செய்து அதே அடக்குமுறை சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...