accident 8 750x375 1
செய்திகள்இந்தியாஇலங்கை

நாகாவதி முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் மோட்டார் வண்டியில் பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதி முகாமில் வசித்து வரும் அருண்குமார் (26) என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நாளை நல்லடக்கம் செய்யப்படஉள்ளது. இச் சம்பவம் நாகாவதி முகாம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் எனவும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Image 2021 11 22 at 8.08.53 PM

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...