கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான உலகலாவிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக ‘Our World’ இணையத்தளத்தால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை காணப்படுவதுடன் இரண்டாவது இடத்தில் ஈக்குவடோர் உள்ளது,
இதேவேளை, புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.
இதேவேளை குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், இலங்கைக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
Leave a comment