Pakistan
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர் கொடூரமாகக் கொலை: நாடாளுமன்றில் ஆர்ப்பரித்த குரல்கள்!!-

Share

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

“பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர், அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, நீதியை வழங்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் தலையிட்டுள்ளார். இதனை நாம் மதிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இக்கொடூர சம்பவத்தை வன்மையாக தமது கட்சி கண்டிக்கிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் பாகிஸ்தானில் உள்ள இலங்கைத் தூதுரகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...