st 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றோர் அல்ல – ஸ்டாலின் இடித்துரைப்பு

Share

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர் அல்ல.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட மேல்மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு 142 கோடி ரூபா செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை.

நாம் நாம் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம். மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரச ஏற்கும்.

இலங்கை தமிழர்கள் என்றுமே ஆதரவற்றவர்கள் அல்ல. தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka #india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...