st 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றோர் அல்ல – ஸ்டாலின் இடித்துரைப்பு

Share

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர் அல்ல.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட மேல்மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு 142 கோடி ரூபா செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை.

நாம் நாம் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம். மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரச ஏற்கும்.

இலங்கை தமிழர்கள் என்றுமே ஆதரவற்றவர்கள் அல்ல. தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka #india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...