இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இந்தியா சென்ற பிரதமர் இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இன்று காலை சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ள அவரும் அவரது குடும்பத்தினரும் மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளனர்.
அத்தோடு அடுத்த வருடத்திற்கான டைரி, காலண்டர் என்பன பிரதமருக்கு ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.
#SriLankaNews