3 5
செய்திகள்இந்தியாஇலங்கை

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை! – நாளை போராட்டம்

Share

இலங்கை கடற்படையின், படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளது எனவும் , குறித்த படகில் பயணித்த மீனவர்கள் 7 பேர், கடலில் மூழ்கிய நிலையில், ஏனைய படகுகளில் சென்ற சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர் எனவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்பவம் தொடர்பில் தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் புதன் கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புறப்பட்ட மீனவர்கள், கச்சதீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை , இலங்கை கடற்படையினர் தமது வேக படகில் வந்து மீனவர்களை துரத்தினர்.

அதன் போது , ஒரு படகுடன் கடற்படையினரின் படகு மோதிய நிலையில், படகு கடலில் மூழ்கியது.

அதன் போது குறித்த படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் , சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

3 4

இதேவேளை, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் , தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு வடக்கு மீனவ சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருவதுடன் , போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், நாளையதினம் காரைநகரில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி மீனவ சங்கங்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...