3 5
செய்திகள்இந்தியாஇலங்கை

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை! – நாளை போராட்டம்

Share

இலங்கை கடற்படையின், படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளது எனவும் , குறித்த படகில் பயணித்த மீனவர்கள் 7 பேர், கடலில் மூழ்கிய நிலையில், ஏனைய படகுகளில் சென்ற சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர் எனவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்பவம் தொடர்பில் தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் புதன் கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புறப்பட்ட மீனவர்கள், கச்சதீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை , இலங்கை கடற்படையினர் தமது வேக படகில் வந்து மீனவர்களை துரத்தினர்.

அதன் போது , ஒரு படகுடன் கடற்படையினரின் படகு மோதிய நிலையில், படகு கடலில் மூழ்கியது.

அதன் போது குறித்த படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் , சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

3 4

இதேவேளை, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் , தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு வடக்கு மீனவ சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருவதுடன் , போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், நாளையதினம் காரைநகரில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி மீனவ சங்கங்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...