i9
செய்திகள்அரசியல்இலங்கை

முட்டிமோதிக் கொள்ளும் இலங்கை – சீனா

Share

ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்து வந்த சீனா தற்போது அவர்களின் கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. –

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சீன அரசால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக சர்வதேசத்தால் ராஜபக்ச அரசை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியை பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்சக்களுக்கு கிடைக்கப் பெற்றது.

அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இரு நாட்டு நட்புறவில் பாரியதொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் வகையில் சேதனப்பசளை விவகாரம் காணப்படுகிறது. இதனை மையப்படுத்தியே மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை இலங்கை இறையாண்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் சீனாவின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் செயல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன உரத்தின் தரம் குறித்த சர்ச்சை சீனாவின் சினத்துக்கு காரணமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் பல திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளது. சீன நிதியில் இலங்கையில் முக்கிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை சீனாவின் கடனுக்குள் சிக்கியுள்ளது. இதனால் இலங்கை மீது சீனா தனது அழுத்தத்தை பிரயோகின்றது.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவுக்கு வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...