இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை

Share

மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

இன்றையதினம் (04.07.2023) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளனர்.

சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக , ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.

இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

இவர் நியூஸிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், அதேதொடரில் 3 ஆவது போட்டியில் 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மொத்தமாக 3 போட்டிகளிலும் இவர் 248 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...