செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல். லில் சாதித்த அதிவேக பந்து வீச்சாளர்!

Share
imran
Umran Malik
Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும், ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் அதிவேக பந்து வீச்சாளராக, ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் 9வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய 4வது பந்தில் இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மணிக்கு 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி அவர் சாதனை படைத்துள்ள நிலையில், அவர் வீசிய பந்திற்கு ஒரு ஓட்டமே பெறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கிலோ மீற்றர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசியிருந்த நிலையில், ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களின் தர வரிசையில் 10ஆவது இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...