IMG 20220409 WA0016
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளை!

Share

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகின்ற தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளையதினம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் நாவாந்துறை சென் நீக்கீலஸ் விளையாட்டுக் கழகமும், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றபோதே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.

இப் போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.

போட்டிக்கான அனுசரணையை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் ஆகியன பொறுப்பேற்றுள்ளன.

போட்டியின் வெற்றி கிண்ணமும் இன்றையதினம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

IMG 20220409 WA0015

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...