india 5
செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Share

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T 20 துடுப்பாட்ட போட்டியில் விளையாடின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது.

அணித்தலைவர் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல், 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

ராகுல் மற்றும் ரோகித் 50 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தனர்.

பின்னர் சூரியகுமார் யாதவ், ரோகித் உடன் சேர்ந்து 59 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தார்.

அணித்தலைவர் ரோகித் 36 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சூரியகுமார், 40 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் 5 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அக்சர் பட்டேல் மற்றும் பண்ட் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பண்ட் நான்கு ஓட்டங்களை எடுக்க இந்தியா 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...