செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா ஓபன் இறுதிப்போட்டியில் நடால்!!

Share

அவுஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியொன்றில் ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான ஸ்பெயின் வீரரான நடால் 6-3, 6-2 ,3-6 ,6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்பெயின் வீரரான நடால் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மெட்விதேவ் அல்லது கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.

இறுதிப் போட்டியில் நடால் வெற்றி பெற்றால் நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடனான மும்முனைப் போட்டியை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைப் வென்ற வீரர் என்ற சாதனையினை பெறுவார்.

தற்சமயம் மூன்று வீரர்களும் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நடால் 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரே ஒருமுறை (2009-ம் ஆண்டு) வென்றுள்ளார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...