277371431 284227340540596 5732079482642722028 n
இந்தியாஇலங்கைசெய்திகள்விளையாட்டு

இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை யுவதி!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த யோகராசா நிதர்சனா இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இலங்கை மற்றும் இந்திய அணியினர்களுக்கிடையில் INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து

இப்போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

ஆசிரியர் நந்தகுமாரிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692cda477c3f7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு நாயாறு பாலம் மீட்பு: இராணுவ பொறியாளர்களின் துரித நடவடிக்கையால் மீண்டும் போக்குவரத்து சீர்!

‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு – நாயாறு...

25 6906f59203ad8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது; பெல்லன்வில பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

தெஹிவளை, குவார்ட்ஸ் (Quartz) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்...

marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...