கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க!

malinka

கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க!

அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுகிறேன் என இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

இதனை தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

38 வயதாகும் லசித் மலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

எனினும் ரி20 போட்டிகளில் விளையாடுவேன் எனத் தெரிவித்த மலிங்க தற்போது அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான லசித் மலிங்க இன்று வரையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் .

தொடர்ந்தும் கிரிட்கெட்டுக்கு ஆதரவு வழங்குவேன் எனவும் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version