ipl auction 2022 live news indian premier league auction latest updates 1024x768 2
விளையாட்டுசெய்திகள்

ஜ.பி.எல் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இம்மாதம் 24ல் ஆரம்பம்!!

Share

10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியில் ஒரு வீரராக அவர் தொடருகிறார்.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம்தான் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வருகிற 12-ந் தேதி மாலை அறிவிக்கப்படுகிறது.

அப்போது அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டுபெலிசிசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்படவுள்ளார்.

பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மேக்ஸ் வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அணி நிர்வாகம், டுபிளசிஸை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

#SportsNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...