செய்திகள்விளையாட்டு

3 போட்டிக்கும் ஒவ்வொரு கேப்டன்! – தென்னாப்பிரிக்காவை கிண்டலடித்த முன்னாள் வீரர்

1775240 shubman gill
Share

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.

இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர். அணியின் வழக்கமான கேப்டன் பவுமா, முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2-வது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை.

2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென்னாபிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. டேவிட் மில்லர் தென்னாபிரிக்க அணியை வழிநடத்தினார். இவ்வாறு 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென்னாபிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...