Banner 9 2
விளையாட்டுசெய்திகள்

ரெய்னாவை அணிக்குள் எடுக்காததற்கு சென்னை சொன்ன சாட்டு!!

Share

ஐ.பி.எல் ஏலத்தில் ரெண்யாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.

15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார்.

ஆனால் சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை .

இதனால் மனமுடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிஸ்டர் ஐ.பி.எல் என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி தங்களது வருத்தங்களையும் பதிவிட்டனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ரெய்னாவை ஏலம் எடுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது:

சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டாக சுரேஷ் ரெய்னா திகழ்ந்து வந்தார். இவரை ஏலம் எடுக்காதது எங்களுக்கு வருத்தமே.

அணியின் தேவையை கருத்தில்கொண்டே ஏலத்தில் செயல்பட முடியும். அணியின் தேவைதான் முதன்மையானது என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த உத்தேச அணியில் சுரேஷ் ரெய்னாவின் தேவை இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே அவரை வாங்கவில்லை. டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடத்தை நிரப்புவது நிச்சயம் எளிதல்ல என தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா இதுவரை 205 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் உள்பட 39 அரைசதங்கள் அடங்கும். மேலும், ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...