IMG 20220418 WA0014
இலங்கைசெய்திகள்விளையாட்டு

2022 ஆம் ஆண்டின் முதலாவது கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.

Share

மட்டக்களப்பு – சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது.

கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இதில் விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் இரு அணிகளும் எந்தவித கோள்களையும் உட்புகுத்தாத நிலையில் தண்ட உதைமூலம் போட்டியில் வெற்றி தேல்வி தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தண்ட உதையில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சிறந்த வீரனாக விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழக வீரன் அருணகிரிநாதன் யுதர்சன் (யனு) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220418 WA0012 IMG 20220418 WA0011 IMG 20220418 WA0010 IMG 20220418 WA0013 IMG 20220418 WA0015

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...