rtjy 148 scaled
செய்திகள்விளையாட்டு

விராட் கோலி முதலிடம்: பின்தள்ளப்பட்ட தென்னப்பிரிக்க வீரர்

Share

விராட் கோலி முதலிடம்: பின்தள்ளப்பட்ட தென்னப்பிரிக்க வீரர்

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் தென்னப்பிரிக்காவின் டி கொக்கினை (591) பின்தள்ளி 594 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்

இந்தியாவின் முன்னாள் அணி தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,677 ஓட்டங்களை குவித்துள்ளார்.

35 வயதான கோலி சச்சின் பெற்ற 49 ஒருநாள் சதத்தினை சமீபத்தில் சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில் உலக கிண்ண தொடரின் போட்டியின் கடைசி சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டதை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் தனது 71வது அரைசத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார் விராட் கோலி.

51 ஓட்டங்களை எடுத்திருந்த வேளையில் வொன் டெர் மெட்டின் ஓவரில் அவர் ஆட்டமிழந்திருந்தார்.

மேலும், தென்னப்பிரிக்காவின் டி கொக்கினை (591) பின்தள்ளி 594 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

மீதமிருக்கும் அரையிறுதிப் போட்டியில் வென்றால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் ஒரே உலகக் கிண்ண தொடரில் சச்சின் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களை (673) கோலியினால் எளிதில் அடைய முடியும் என கிரிக்கெட் ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...