PSX 20210902 161451
விளையாட்டுசெய்திகள்

பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

Share

பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் 2020 போட்டிகளில் பதக்கம் பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு பண வெகுமதிகளை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் துலன் கொடித்துவக்கு ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சால் ஹேரத்துக்கு 50 மில்லியன் ரூபாவும், கொடித்துவக்குவுக்கு 20 மில்லியன் ரூபாவும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வேண்டுகோளின் பேரில், இந்த சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது என விளையாட்டுத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை பின்வருமாறு:

தங்கம் – ரூ. 50 மில்லியன்.
வெண்கலம் – ரூ. 20 மில்லியன்.
4 ஆவது – 8 ஆவது இடம் – ரூ. 2.5 மில்லியன்
9 ஆவது -16 வது இடம் – ரூ. 1 மில்லியன் (x4)
உலக சாதனை – ரூ. 10 மில்லியன்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...