KL Rahul
விளையாட்டுசெய்திகள்

கே.எல்.ராகுலுக்கு 20 கோடியா?

Share

கே.எல்.ராகுலை 20 கோடிக்கு  ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

IPL 2021ன் பஞ்சாப் அணியின் அணித்தலைவராக துடுப்பெடுத்தாடிய  கே.எல்.ராகுலை 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ என இரு புதிய அணிகள் களமிறங்கவுள்ளன.

இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் 7,090 கோடி கொடுத்து சொந்தமாக்கியுள்ளது.

அகமதாபாத் அணியைச் சிவிசி கேப்பிடல் எனும் நிறுவனம் 5,600 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

வரும் 2022 IPL T20 சீசனில் 10 அணிகள் களமிறங்கவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 3 உள்நாட்டு வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் மீண்டும் தங்கள் அணிக்காக வைத்திருக்க முடியும் .

மற்ற வீரர்கள் வேறு அணிக்கு ஏலத்தில் எடுபடுவார்கள்.

இந்நிலையில் கே.எல்.ராகுலை தனக்கு சொந்தமாக்கி கொள்ள லக்னோ அணி பெரும் பாடுபட்டு வருகிறது.

பஞ்சாப் அணியும் கே.எல்.ராகுலை எந்த அணிக்கும் விட்டுக்கொடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...