கே.எல்.ராகுலுக்கு 20 கோடியா?

KL Rahul

KL Rahul

கே.எல்.ராகுலை 20 கோடிக்கு  ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

IPL 2021ன் பஞ்சாப் அணியின் அணித்தலைவராக துடுப்பெடுத்தாடிய  கே.எல்.ராகுலை 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ என இரு புதிய அணிகள் களமிறங்கவுள்ளன.

இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் 7,090 கோடி கொடுத்து சொந்தமாக்கியுள்ளது.

அகமதாபாத் அணியைச் சிவிசி கேப்பிடல் எனும் நிறுவனம் 5,600 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

வரும் 2022 IPL T20 சீசனில் 10 அணிகள் களமிறங்கவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 3 உள்நாட்டு வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் மீண்டும் தங்கள் அணிக்காக வைத்திருக்க முடியும் .

மற்ற வீரர்கள் வேறு அணிக்கு ஏலத்தில் எடுபடுவார்கள்.

இந்நிலையில் கே.எல்.ராகுலை தனக்கு சொந்தமாக்கி கொள்ள லக்னோ அணி பெரும் பாடுபட்டு வருகிறது.

பஞ்சாப் அணியும் கே.எல்.ராகுலை எந்த அணிக்கும் விட்டுக்கொடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#SPORTS

Exit mobile version