chi 1
செய்திகள்உலகம்

100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை

Share

100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை

உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.

கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில் ஏனைய நாடுகளுக்கு பரவி மிகப்பெரும் பாதிப்புகளை இன்றுவரை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.

அதிக மக்கள் தொகை உலகிலேயே கொண்ட நாடாக சீனா உள்ளது. சீனாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். சீன மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடேய்ப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வரை சீனாவில் 216 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீன மக்கள் 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்கும் முழுமையாக (2 முறை) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...