4fc98fb7 foreign employment
செய்திகள்இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!!

Share

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து , அதனைபதிவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவோருக்கு கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

இதேவேளை, குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே பணியாளர்கள் ஏற்றியிருக்க வேண்டும் என எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அதற்கமைய பைஸர், அஸ்ராஜெனகா, மொடனா மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை வௌிநாடுகள் அங்கீகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...