image 500ea8af0b
செய்திகள்அரசியல்இலங்கை

எதிர்கட்சித் தலைவரின் விசேட அறிவிப்பு!!

Share

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை ஏற்றியிருந்தாலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

டெல்டாவைவிட ஆபத்தாகக் கருதக்கூடிய ஒமிக்ரோன் பிறழ்வு எமது நாட்டுக்குள் பரவும் அபாயமும் இருக்கின்றது. எனவே, இதனை தடுப்பதற்கு சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தற்போது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது ஆனால் ஒரு வயது பகுதியினருக்கு மாத்திரமே இது வழங்கப்படுகிறது. எனவே அரசாங்கம் முன்வந்து தடுப்பூசி கிடைக்கபெறாத அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...