yohani 720x375 1
செய்திகள்இலங்கை

இந்திய இசை நிகழ்வில் பாடுகிறார் இளம் பாடகி யொஹானி!

Share

மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி மற்றும் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கத்திலும், அக்டோபர் 3ம் திகதி ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யொஹானி டி சில்வா இந்தியாவில் பங்குபற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

யொஹானியின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து யொஹானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ என கூறியுள்ளார் .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...