இந்திய இசை நிகழ்வில் பாடுகிறார் இளம் பாடகி யொஹானி!

yohani 720x375 1

மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி மற்றும் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கத்திலும், அக்டோபர் 3ம் திகதி ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யொஹானி டி சில்வா இந்தியாவில் பங்குபற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

யொஹானியின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து யொஹானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ என கூறியுள்ளார் .

 

Exit mobile version