Medicines
செய்திகள்இலங்கை

நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

Share

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின் இருப்பு மூன்று மாதங்களுக்கே போதுமானது. அத்தியாவசியமான மருந்துகளுக்கு நாட்டில் 5% தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான மருந்தகங்கள் மாற்று வர்த்தக நாமங்களையுடைய மருந்துகளையே தற்போது நுகர்வோருக்கு வழங்கி வருகின்றன. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு நீடிக்க முடியாது.

மருந்து பிரச்சினை என்பது நாட்டின் அனைத்து மக்களின் ஆரோக்கியம் சம்பந்தமானது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஏனைய பொருட்களின் தட்டுப்பாட்டை விட மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

இதனை நிவர்த்திசெய்ய அரசாங்கம் தலையிடாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக மருந்துகளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சில மருந்துகளுக்கு விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டால் பெரும்பாலான மருந்தகங்களில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

தொடர்ச்சியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு தொடருமாயின், இன்சுலின் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது, நாட்டில் பரசிட்டமோல், பனடோல், பனடீன், ஃப்ரீசியம், சாதாரண உப்பு மற்றும் ஜினாட் உள்ளிட்ட மருந்துகளில் பெரும்பாலானவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் சிரப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொவிட், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை சமூகத்தில் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பரசிட்டமோல் மாத்திரைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சந்தைக்கு பரசிட்டமோல் போதியளவு விநியோகம் இல்லாமையால் நாட்டில் பரவலாக தட்டுப்பாடு நிலவி வருகிறது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...