sl army
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரியாலை பகுதியில் துப்பாக்கி சூடு! – ஒருவர் படுகாயம்

Share

மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் மீது இன்று மாலை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார். படுகாயமடைந்த அவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் அரியாலை முள்ளியைச் சேர்ந்த யசிந்தன் (வயது – 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, குறித்த உழவு இயந்திரம் மணல் ஏற்றிய பெட்டியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...