Coconut Robbery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பறித்ததோ 03 தேங்காய்: பிணையோ 2 இலட்சம் ரூபாய்

Share

மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் மூன்று தேங்காய்களைப் பறித்தமையால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கைதான மூவரும் காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெல உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரும் காலியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தேங்காயைப் பறித்துள்ளனர். அதிகமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் தென்னந்தோப்பு உரிமையாளர் தனது காணியில் சிசிரிவி கெமராவை பொருத்தியுள்ளார்.

சிசிரிவி காட்சிகளைக் கொண்டே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...